ஒன்றுசேர்ந்து

சென்னையில் கழிந்த 19ம் தேதியன்று புகைப்பட கலைஞர்களின் சங்கமம் நடைபெற்றது. அதை புகைப்பட கலைஞர்களின் திருவிழா என்று கூட‌ எடுத்து கொள்ளலாம். தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில்லிருந்தும் புகைப்பட கலைஞர்கள் படையெடுத்து சென்னைக்கு வந்திருந்தனர்.நந்தனம் டிரேட் சென்றரில் பல விதமான புகைப்படத்துறை சார்ந்த நிறுவனங்களும் வந்து குவிந்திருந்தனர்.பல்வேறு உயர் தொழில் நுட்ப கருவிகளையும் அரங்கில் காணமுடிந்தது.சென்னை நகரில் வாடகை ரூம் கிடைப்பது குதிரை கொம்பாகி போயிருந்தது.வருடந்தோரும் நடைபெரும் இந்த திருவிழாவிற்கு இந்த தடவை மிகவும் அதிகமான‌ புகைப்பட கலைஞர்களை வரவைத்திருந்தது.கரணம் "புவி வெப்படைதல்" விழிப்புனர்வு என்ற நிகழ்வாகும்.
ஒரு குறிப்பிட்ட‌ உல‌க‌ உருண்டை போன்ற‌தெரு உருவ‌த்தை சுமார் ஐந்த‌யிர‌ம் புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர்க‌ள் ஒன்றுசேர்ந்து கேமிராவால் ஒரே நேரத்தில் ப‌ட‌ம் ப‌திவு செய்த‌ன‌ர்.இந்த‌ நிக‌ழ்வை கின்ன‌ஸ் சாத‌னையிலும் ம‌ற்றும் லிம்கா சாத‌னையிலும் இட‌ம்பெற‌ செய்வ‌த‌ற்கும் ஏற்பாடுகள் செய்திருந்த‌ன‌ர்.
ஒரே நேர‌த்தில் ஒரே இட‌த்தில் அத்த‌னை க‌லைஞ‌ர்க‌ளும் கேமிராவோடு குழுமியிருந்த‌து காண‌ க‌ண் கொள்ளாத‌ காட்சியாக‌யிருந்த‌து.
நிக‌ழ்சி ஏற்பாடு செய்த‌ அமைப்பாள‌ர்க‌ள் மிகவும் பார‌ட்டுக்குறிய‌வ‌ர்க‌ள்.

"புவி வெப்படைதல்" விழிப்புனர்வு என்ற நிகழ்வை ம‌ன‌தில் கொண்டு கலைஞர்கள் ஃப்ளாஸ்க‌ளை தவிர்த்திருந்தால் இன்னும் இந்த நிகழ்வு அர்த்த‌முடையதாக‌ இருந்திருக்கும்.

0 comments: