இந்த தடவை சுத்த சைவமா எல்லாரும் இருக்கனும் பார்த்துகிடுங்கன்னு... ஆர்டர் போட்டார் அன்னாச்சி.
எங்க போகப்போறோம் தெரியும்ல்லா...திருநள்ளர்க்கு இப்படி அன்னாச்சி ஆரம்பித்து வைத்தார்.பிறகு அந்த டூரை பத்தியே பேசி பேசி அதை அப்படி இப்படின்னு டெவலப்பு செய்தது நண்பர் ஐயப்பனுடைய வேலையாக இருந்தது. அன்னாச்சி யாரும் குடிக்க கூடாதுன்னு கண்டிப்புடன் எல்லோர்ட்டையும் சொல்லிட்டார்.ஆக அது ஒரு பக்திமயமான டூர் மாதிரி வடிவத்திற்குள் வந்து விட்டது.
அக்டோபர் 2ம் தேதின்னு நாளும் குறித்தாகிவிட்டது.அன்னாச்சிக்க டாட்டா சுமோ அதன் டிரைவராக விஜயன் ஓட்டவேண்டும் என்று முடிவானது.குறிப்பிட்ட நாளும் கிழமையும் வந்தது,அன்னாச்சிக்க வண்டியும் வந்தது டிரைவர் விஜயன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி, காரணம் அன்னாச்சிக்க டாட்டா சுமோ அரிது பழதான நிலையுள்ள கிடுவு வண்டி.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதிலா இத்தனை தூரம் நாம் பயணம் போவது என வினா மனதில் எழும்பியது.
டிரைவர் விஜயன் முழி பிதுங்கி காணப்பட்டார் ரகசியமாக அருகில் போய் கேட்டேன் எப்படி என்ன செய்வது என்று.எல்லா பாரத்தையும் ஆண்டவன் மேலே போடுவேம் அவன் பாத்துகிடுவான் எல்லாரு வண்டியில ஏறுங்கன்னு தைரியம் சென்னார்.வண்டி புகையை கக்கிய படி நாகர்கோவிலிருந்து கிளம்பியது.
வழியில முப்பந்தல் அம்மன் கோவிலில்,பனகுடியில மாதாகோவிலில் வேண்டிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பித்தது.
வண்டியின் கண்டீசன் மிக மோசமான நிலை.அன்னாச்சியும் அவர்களின் நண்பர்களிடையேயும் எந்த விதமான பதட்டமும் காணமுடியவில்லை.இரவு முழுதும் தொடந்த எங்கள் பயணம் அதிகாலை திருநள்ளார் நெருங்கி ஒரு ஊரில் பம்புசெட்டின் முன்னால் நின்றது.சுகமான பம்புசெட் குளியல்.திருநள்ளாரின் மூண்று கிமி முன்னதாக போலிசாரால் தடுத்து நிறுத்த பட்டோம் அங்கே அதிகபடியான வண்டியும் ஜனக்கூட்டமக இருந்தது. டிரைவர் விஜயன் அள்ளிவிடார் போலீசிடம் கலவரத்தை படம்புடிக்கிற பத்திரிகைகாரங்க வண்டியில இருக்காங்கன்னு.சலூட்டடித்து வழியனுப்பினர் போலீஸ்.திருநள்ளாரின் கோவிலருகிலேயே வண்டி போய் சேர்ந்தது.
அன்று சனிப்பெயர்ச்சி கட்டுகடங்காத கூட்டம் எங்கும் ஒரே ஜனத்திறள்.வெறும் வயிற்றேடு சாமியை தரிசனம் செய்ய நண்பர்கள் நின்றார்கள் சுமார் நான்கு மணிநேரம் கீவுவில்.அப்படியும் கனநொடிப்பொழுதுதான் சாமி தரிசனம் தான் நண்பர்களுக்கு கிடைத்துள்ளது.நான் வழக்கம் போல கேமிராவேடு ஊர் சுற்றினேன்.
திருநள்ளாரின் குளத்தில் நீராடிவிட்டு ஏதாவது உடமையை விட்டு விட்டு வரவேண்டுமாம் இது ஐதீகம்.செய்த பாவஙகள் விட்ட உடையையேடு போய்விடுகிறதாம்.குளக்கரையிலும்,வழியெங்கிலும் பழைய துணி்களும் பிஞ்சுபோன பையும்,ஜட்டி,பிரா,ஜம்பர் சேலை இப்படி இரைந்து கேட்பாரற்று கிடக்கிறது.நாலு பாவப்பட்டவங்களுக்கு இந்த துணிகளை கொடுத்ருந்தால் புண்ணியம் கிடைச்சிருக்கும்.
தேங்காய் விடலை போடும் இடத்தில் குவியல் குவியலாக தேங்காய் உடைபட்டு கிடக்கிறது.
மிக அருகாமையில் தான் காரைக்கால் உள்ளது அங்கு சரக்கு விலை குறைவு என டிரைவர் விஜயன் சிறப்பு தகவல் தர.அன்னாச்சியிடம் தீடீர்ன்னு ஒரு மாற்றம் கிளப்புங்கப்பா வண்டியைன்னு அன்னாச்சி உத்தரவு தந்தார்.பிறகு என்ன காரைக்கால் போய் சேர்ந்தோம். ஏசி ரூமில் ஜேடிஃப் மூடிகள் திறந்தன.உற்ச்சாகம் மடை திறந்தது போல ஓடியது.இரவு காரைக்காலில்.
சுத்த சைவம் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்ந்தது.
திருநள்ளாரில் பாவங்கள் தொலைந்ததா ? நம்மை பிடித்தி்ருந்த சனி இத்தோடு விட்டுவிட்டதா? இல்லை தொடர்கிறதா என்ற கேள்வி மட்டும் என் முன் இன்றும் நிற்கிறது.
தங்க நாற்கர சாலையில் பயணம் மி்கவேகமனது.ஆனால் மிக நீண்ட விரிந்த அந்த வழியில் மரங்களோ செடிகளோ காண முடியவில்லை பொட்டல் காடாக உள்ளது.ஆனால் ஊர்களின் உட் புற சாலையில் பயணம் மிக ரம்மியமாக இருந்தது அடர்ந்து விரிந்த மரங்கள் வானமா குடை பிடித்து வந்தது.இருமருங்கும் சாலையில் மரங்கள் அணிவகுத்து நின்றது.அதன் ஊடே மஞ்சள் வெயில் உட் புகுந்து கோடுகிழித்து வந்தது.
மழை வெள்ளம் கரைபுரண்டு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஓடினாலும் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் உள்ளதகவே தெரிகிறது ஆங்காங்கே தண்ணீர் குடங்களோடு மக்கள் அலைவதை காணமுடிந்தது.
சனிபகவானை பார்த்தாயிற்று இனி பொங்கு சனிபகவானை பார்க்கவேண்டும் என்றார் அன்னாச்சி எனவே திருகொள்ளிகாட்டு போனோம்.அதுவும் திருக்குவளை தாண்டி நீண்ட ஒத்தையடி பயணம்.வழிநெடுக வயல்வெளியும் பச்சை பசலென கண்களுக்கு விருந்துதான்.தஞ்சையின் நெற்களைஞ்சியம் மிக் பிரமிப்பாக இருந்தது ஒருபக்கம் நாத்தை நடுகிறார்கள் இன்னொருபுரம் கதிர் அறுக்கிறார்கள்.
நெல் மணியில் பதரை உதற தெரிந்த மானிடனுக்கு வாழ்வில் பதறு என்ற தீமைகளை உதற இறைவனை நாடுகிறான்.
வழியில் கீரலத்துர் என்ற ஊரில் வண்டியை இளைப்பாற விட்டோம்.நண்பர்களும் தாக சாந்தியில் ஈடுபட்டனர்.அங்கு ஒரு பொட்டிகடை வாசலில் போஸ்ட்பாக்ஸ் கட்டி தொங்கவிட்டுருந்தது அதை பூட்டவில்லை திறந்து பார்த்தால் நமது நாட்டின் சக பிரஜை பொருப்பாக தீப்பெட்டி வைக்க பயன்படுத்துகின்றனர்.ஈமெயில் வந்த பிறகு கிரமங்களில் கூட தபால் எழுது பழக்கம் இல்லை என்பதை உணரமுடிந்தது.


2 comments:
எங்க ஊரு பக்கமா போயிட்டு வந்திருக்கீங்க...அனுபவம் நல்லாருக்கு...
ஆமா சனி விட்டிடுச்சிங்களா....
அதை ஏங் கேக்கிறீக--- சனியை நம்ம கூடதானே கூட்டிட்டு திரியுறோம்... கட்டுரையை படித்ததுக்கு மிக்க நன்றி.
Post a Comment