அஞ்சலி
காலை வேளையில் 'ஜே'யிடமிருந்து இந்த 'ஜே'க்கு தொலைபேசி, நீங்கள் என்னை எடுத்துதந்த படங்களை மாத்ருபூமி இதழுக்கு கொடுத்திருக்கிறேன். அப்புறம் மிக முக்கியமான தகவல், இன்று மதியத்திற்கு மேல் எழுத்தாளர் பூமணியின் இறுதிசடங்கிற்கு போகிறேன் என்னோடு வாருகிறீர்களா ? நிச்சயமாக வருகிறேன் என்றேன். மாபெரும் கரிசல் இலக்கிய படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்த கிளம்பி இருந்தேன். ஸ்டுடியோ வாசலில் கார் வந்து நின்றது. அவர் காரிலிலே அமர்ந்திருந்திருக்கலாம். ஆனால் அவர் இறங்கி வந்து, வாங்க போகலாமென வெளியில் நின்றார். உள்ளே வாங்க என்று ஜே யை ஸ்டுடியோவினுள்ளே அழைத்தேன். உள்ளே வந்தவர் என் பெயரிலா நீங்கள் ஸ்டுடியோ வைத்திருக்கிறீர்கள் என்று புன்னகைத்தார். ஆமாம் என் ஸ்டுடியோவின் பெயர் " ஜே ஸ்டுடியோ". இரண்டு 'ஜே' க்களுமாக சேர்ந்தே சிரித்தோம். பொன்னீலன் ஐயா நடமாடி திரிந்த காலங்களில் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி என் ஸ்டுடியோவிற்கு அவ்வப்போது வந்துவிடுவார். இப்போதெல்லாம் யார் துணையுமின்றி அவர்களால் வெளி வர இயலாது. குழந்தையைப்போல இருக்கிறார். கோவில்பட்டிக்கு ...
