கொண்டல் கண்காட்சி
'கொண்டல்' என்கிற தலைப்பில் மிக அற்புதமான படைப்புகள்,ஓவியம் மற்றும் ஒளிப்படக் கண்காட்சியினை சென்னை லலித் கலா அகாடமியில் இன்று காண வாய்த்தது. எனக்கிருந்த பணிகளுக்கிடையே சொற்பமான மணிநேரமே அரங்கத்தில் செலவிட முடிந்தது. தரையிலிருந்து படையென கிளம்பி வான் நோக்கி செல்லும் மீன்களை காண்கிற போது, மீன்கள் வலசை போகிறதை படைப்பு நினைவு படுத்தியது.எங்கள் பகுதியில் 'கொல்லத்தில் பிறக்கிற குதிப்பு மீன் பள்ளத்தில் துள்ளும்' என்கிற சொல்லாடலை சொல்வார்கள். எதார்த்த மீனவர்களின் வாழ்க்கையினை படங்களும் ஓவியங்களும் பிரதிபலித்தது. மீனவர்களின் முகங்கள், அவர்களது அடுக்களை , மசாலா, மீன் பொறியியல், மீன் வெட்டும் அருவாமனை முன்பு வரை நம்மை அழைத்துச் சென்றது. ஓவியங்களும், ஒளிப்படங்களும் படைப்புகளும் உண்மைக்கு மிக நெருக்கமாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. பாரம்பரிய மீனவர்களின் அறிவினை வாழ்வை தரிசிக்கிற வகையில் இருந்தது. ...

