கொலைக்குடில் - பிரமீடு


நதியில் மடி சுரண்டி
மணல் வந்தது


பர்வத உடல்சிதைத்து
கல் வந்தது


வணம் அறுத்து
கதவும் ஜன்னலும் வந்தது


புவித்தாயின் மார்பில்
துளையிட்டு உறிஞ்சியதில்
நீர் வந்தது

வாஸ்த்து படி
வாணம் தோண்டினர்


இறந்துபோன இயறக்கைஉடல்
வின்முட்ட அடுக்கி
புது வீட்டில் கிரகப்பிரவேசம்...

Comments