வளர் பருவத்திலேயே




சமீபத்தில் எனது பணிக்காக பதிவு செய்ய நான் சென்றது பள்ளிகூடங்களுக்கு அதுவும் பெண்குழந்தைகள் பயிலும் பள்ளிகளில், யுனிசெப் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. வளர்பருவ,வயது வந்த பெண்களுக்கான சுகாதார முறைகளை போதிப்பது.




பள்ளி வளாகத்தில் ஒதுக்குப்புறமான ஒரு அறையை தேர்வு செய்திருந்தனர் நிர்வாகத்தினர், மாணவிகள் கூட்டத்திற்க்கு வரும் வரை என்ன? எதற்கு? என்று கூட தெரியாது அவர்களுக்கு. கூடவே பயிலும் மாணவர்களுக்கு என்ன இவர்களுக்கு சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறாரென்று புதிர் போலும் வகுப்பறையின் வாசலிலும் ஜன்னலிலும் உத்து பார்த்துகொண்டு இருந்தனர்।
கூட்டத்திற்கு வந்தமர்ந்த அத்தனை மாணவிகள் முகங்களிலும் ஒரு வித மிரட்சியுடன் கூடிய நாணத்தை காணமுடிந்தது। நிகழ்ச்சியை நடத்துனர் ஆரம்பித்தார்----மாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை, சுகாதர அனுகுமுறைகள் என....அத்தணை பெண்பிள்ளைகளும் தலைகுனிந்துகொண்டனர்।பெண்ணுறுப்பு,ஜட்டி,நாப்கின்,சுத்தம் செய்தல் போன்ற வார்த்தைகளை நிகழ்ச்சி நடத்துனர்கள் உச்சரித்த உடன் கூட்டத்தில் மாணவிகள் உச் கொட்டி நாணிகோணினர்,பெரும்பான்மையினர் நாப்கின் பயன் படுத்துவது இல்லை என கூறினர், இந்த மாதிரியான செக்ஸ் போதனை தேவை என்றும் தயங்காது கூறியது ஆறுதலான விசயம்.




கூட்டத்தில் கல்ந்து கொண்டவர்களுக்கு இலவசமாய் ஒரு நாப்கின் வழங்கினார்கள் அதை ஆர்வமாய் வாங்கி மறைத்து வைத்துக்கொள்ள மாணவிகள் பிரயத்தனப்பட்டது வேடிக்கை. கூட்டம் நடத்துனர்களிடம் இனிவரும் காலங்களில் நாப்கினோடு மடக்கி வைத்துகொள்ள ஒரு பேப்பர் துண்டும் வழங்க வேண்டும் என நான் எடுத்துரைத்தேன்.
இந்த கூட்டதில் ஆணாக நான் மட்டும் இருந்ததால் என்னால் அவர்களுக்கு சங்கோஜம் வரக்கூடாது எனவெகு துரத்தில் நின்று கவனித்தவனாக, ஸூம்லென்சிலெயே பதிவுகள் செய்தேன்.
வளர் பருவ பெண்களுக்கு இந்த மாதிரியான போதனைகள் மிக அவசியம் என மனதில் பட்டது. மாற்றங்கள் வரப்போவது இனி நிச்சயம் தான்.

Comments

நல்ல பதிவு ஜவஹர்...காலம் காலமாக உடல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கூட இல்லாத நமது அடுத்த தலைமுறை சந்திக்கிற பிரச்சனைதான்.சாதி இருக்கம் நிறைந்த நாகர்கோவில் மாதிரியான பகுதிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் அதிகம்தான்.....இந்த மாணவிகள் நாப்கினை கொண்டு மீண்டும் வகுப்பறைக்கு போவதும்....வீட்டிற்கு செல்வதுமே வேதனையானதுதான்.
நல்ல பதிவு....