மஞ்சள் துணி பூதக்கிழவி


நெல்லை குமரி மக்களிடையே பெரும் பீதி!! மஞ்சள் உடை உடுத்திய வயதான கிழவி ஒவ்வொருவர் வீடுகளுக்கு வருவதாகவும், பிச்சைக் கேட்பதாகவும், பிச்சைக் கொடுத்தவர்கள் உடனடியாக மயங்கி ரத்த வாந்தி எடுத்து விழுகிறார்களாம். அதன் பின்பும் அந்த வீட்டில் பெரும் நோய்களும் எற்படுகிறதாம். இப்படி ஒரு வதந்தி செய்தி கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரப்பகுதிகளிலும் வீடுகளின் வாசல்களில் வேப்பிலையும், மஞ்சள் துண்டும் கட்டி தொங்க விட்டிருக்கிறதை காண முடிகிறது.


இது மாதிரியான புரூடா செய்திகளுக்கு நாட்டில் பஞ்சமில்லை போங்கள். எதை சொன்னாலும் நம்பி விட ஒரு கூட்டம் இருக்கிறது. நாகரீகங்களும், கணினி யுகங்களும், தொழில் நுட்பங்களும் எத்தனை வளர்ந்தாலும் பஞ்சமில்லாத இந்த மாதிரியான புரூடா கதைகளும் வலம் வருகின்றன.


காத்தாவது! கருப்பாவது!


பூதததை பார்க்க ஆசை உண்டா?

படத்தைப் பாருங்கள் சும்மா! அதுவும் புரூடா தான்.


Comments