இறுதிக்கு யாருண்டு






















போட்டோ - ஆனந்த்


பிறாயம் முதல்
உழைக்க ஆரம்பித்தது
மனைவியாய்
தாயாய்
தாதியாய்

வாழ்க்கை சுமை
கருப்பை சுமை
அத்தனையும் சுகமான சுமைகள்

உடம்பின் வலு
துயரங்களை துரத்தியது
பிள்ளைகள் ம்கிழ்வு
எனக்கு மனநிறைவு
இயன்றவரை இப்படியே
வாழ்ந்து விட்டேன்

பதியம் வைத்த செடியாய்
அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்
தூரத்தில் இன்று...

உடம்பு முழுக்க
அனுபவசுருக்கமும் முருக்கும்
தளர்ச்சியுமுண்டு

இறுதிவரை உழைத்து
வாழ்ந்திடுவோம்
கட்டையேறிடும்போதாவது
துணை வருமா உறவுகள்....

Comments