பொட்டகுட்டி


ஒரு புது உலகில தவழ்ந்து வந்த உணர்வு எனக்கு.ஒரே வெளிச்சமாயிருந்தது கூடவே, அருகில் சின்னச்சின்ன நாய் குட்டிகளின் விசும்பல் அழுகையும் கீச்சு குரலில் கேட்டது. சொர சொரப்பான் நாக்கால் என் மேலெல்லாம் நக்கி தந்து உறுமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது என் தாய். வாயால் குதப்பி குதப்பி பால் குடிக்க ஆரம்பித்திருத்தேன்.பால் குடிக்க மட்டும் எங்களிடையே ஒரே போட்டியும் இழுபறியா இருக்கும். கண் தொறக்க ஒரு எட்டு நாளாகும்,என இருவர் எங்களைப் பார்த்து சொல்லிக் கொண்டிந்தது எங்கள் காதில் கேட்டது. ஆண் எத்தனை? பொட்டை எத்த்னை? ரெண்டு மட்டும் தான் ஆணு மத்ததெல்லாம் பொட்ட குட்டிதான் என்று ஒருவர் வருத்தம் தொனிக்க சொன்னார். ஆண் குட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க, பொட்ட குட்டிக்கு முன்னூறு ரூபாய் கொடுங்க. இப்படி ஒரு வாரமா! பலரும் பார்த்துகிட்டும் பேசிக்கிட்டும் போனாங்க. திடீர்னு ஒரு நாள் ரெண்டு குட்டிய யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க. பெரிய நாயி அப்பப நாக்கால நக்கித் தரும். கொஞ்சம் நெருக்கடியும் கொரஞ்சு இப்ப நல்லா பால் குடிக்க முடிஞ்சது. பொட்ட குட்டிகல வளர்த்து ஒரு ப்ரயோஜனம் இல்லை. நூறு ரூபாய் கிடச்சாலும் இதுகளை தூக்கி கொடுத்துடுங்கனு, அந்த வீட்டுல ஒரு பெரியம்மா சொல்லிகிட்டாங்க. ஒரு நாள் ஒரு சின்ன பையில என்னை தூக்கிட்டு ஒருத்தரு கொண்டு போனாரு, பயங்கர சத்தமா பெரிய நாய் குலைச்சுது. அங்க ஒரு வீட்ட்டுல கொண்டு பொய் விட்டங்க்.அந்த விட்டுல இருந்த சின்ன பையனுக்கு என்ன பார்த்த உடனே பயங்கர சந்தோசம், கைய,கால தூக்கிட்டு ஓடி கிட்ட வந்து செல்லமா தடவி தந்து,முத்தம் தந்தான். அங்க நஞ்சு போன அலுமினிய தட்டுல பாலை ஊத்தி வைப்பாங்க எனக்குதான் நக்கி குடிக்க தெரியல. சின்ன பையனத் தவிர யாருக்கும் நான் அங்கு போய் சேர்ந்ததில சந்தோசம் இல்லை. போயும் போயும், பொட்ட குட்டிய தூக்கிட்டு வந்திருக்கிறியே- என அந்த ஆளை எல்லோரும் திட்டிதீத்தாங்க. ஆண்குட்டின்னாவது காவல் கிடக்கும், இதை போய் யாரால கெட்டி காக்க முடியும் ஊர் மேய போயிடும், இது நமக்கு லாயக்கு படாது, யாருக்காவது தூக்கி கொடுத்துடலாம்னு சொல்லிகிட்டுருந்தாங்கைந்த சந்தோசமும் அதிக நாள் நீடிக்கல, அந்த வீட்டுல உள்ள சின்ன பையன் கதறி அழுதான். எனக்கு அந்த நாய் குட்டி வேணும்ன்ப்பா, இதை கொண்டு போயிராதீங்கன்னு அடம் பிடிச்சு அழுதான். மறுபடியும் ஒரு பையில எனது பயணம் ஆரம்பமானது. என்னை கொண்டு போய் ஒரு கடை வீதியில விட்டாங்க. எங்க பொற்துனே வழி தெரியாம முழிச்சேன். என்னை பார்தத உடனேயே ஒரு சிலர் கிட்ட நெருங்கி வந்து வெக்கங்க்கெட்டதனமாய் என்னை தூக்கிப் பார்த்து பொட்ட குட்டின்னு முகங்க்சுழிசுசு சொல்லிகிட்டு கீழே விட்டுட்டு போயிட்டாங்க.. இன்னும் சிலர் செய்யிறதுதான் ரொம்ப கொடுமை ஒத்த காதை மட்டும் பிடிச்சி என்னை தூக்கிப்பார்ப்பாங்க நானும் மலங்க மலங்க விழிச்சு பார்ப்பேன், எனக்கு சொரணை கிடையாதுன்னு கீழே தொப்புன்னு போட்டுருவாங்க.யாருக்குதான் சொரணையும், வெக்கமும் கிடையாதுன்னு என்க்கு புரியல.இப்ப அங்க இங்கன்னு சுத்திவந்து ஒரு தேர் மூட்டுல படுத்துகிடகேன்.உங்களுக்கு கூட நான் இப்ப வீதிகளில் எதிர்படலாம் ஐம்பது பைசாவுக்கு பிஸ்கட் வாங்கி போடாவிட்டாலும் பரவாயில்ல பீளீஸ் கல்லால் மட்டும் அடிச்சிடாதீங்க... என்னா? கல்லடி பட்டே நான் கோபத்தோட சுத்திட்டிருக்கேன்..

Comments

அருமையான கதைங்க...நல்ல எழுத்து நடை !

வாழ்த்துக்கள் ;)
Baby Pavan said…
கோபிநாத் said...
அருமையான கதைங்க...நல்ல எழுத்து நடை !

வாழ்த்துக்கள் ;)

மாமா சொன்னா கரெக்டாதான் இருக்கும்.....அருமையான கதைங்க...நல்ல எழுத்து நடை !

வாழ்த்துக்கள் ;)