இசையால் வசமாகாத இதயம் எது


-நேர் காணல்-

முத்தப்பா பாகவதர்

வ்யது - 72

சொந்த ஊர் - ம்றவன் குடியிருப்பு,கன்னியாகுமரி
இசை கலைஞர்கள் பலருடைய பேட்டிகளில் முத்தப்பா பாகவதரை நினைவு கூர்ந்து பேசுவதும் தனது குருநாதர் எனவும் அவரை முன்னிலைப் படுத்தி பேசுவதையும் அடிக்கடிப் பத்திரிகைகளிலும் வானொலி போன்ற ஊடகங்கள் மூலமாகவும் நாம் அறிய முடிகிறது.
யார்? இந்த முத்தப்பா பாகவதர், இசையோடு இசைந்து இவர் வாழ்ந்த வாழ்வு என்ன? என்ற கேள்விகளோடு அவரைக் காண்பதற்காக சென்றோம்.
இசைக்காகவே தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த அந்த முதியவர் நாகர்கோவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மறவன் குடியிருப்பு கிராமத்தில் இன்றும் தன்னுடய நாதம் எழுப்பும் ஆர்மோனியப் பெட்டியோடு வாழ்கின்றார்.
பேட்டி என்று அவர் முன்னே நாம் அமர்ந்தவுடன் அவர் கண்களில் ஒரு வித ஒளிபடர்வதையும், விரல்கள் மிடுக்குடன் இசைக்க ஆரம்பித்ததையும் நம்மால் உணர முடிகிறது.


ஐயா உங்களைப் பற்றி?

என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் நாடக துறையில் பக்க மேளம், பிண்ணனிகுரல், மற்றும் நாடக துறைக் கலைஞர்களோடு தொடர்பு ஏற்பட்டது.
யாரிடம் இசை கற்க ஆரம்பித்தீர்கள்?
பூதபபாண்டியைச் சேர்ந்த இசை மேதை அருணாச்சலம் என்பவரிடம் கர்னாடக சங்கீதம் படிக்க ஆரம்பித்தேன்.
நாடக துறையில் எந்த மாதிரியான நாடக்ங்களுக்கு நீங்கள் இசை அமைத்தீர்கள்?
குமரி மாவட்டத்தில் பல கம்பனி நாடகங்களில் பணியாற்றினேன். பலசமூக விழிப்புணர்ச்சி நாடக்ங்களில் எனது பணி தொடர்ந்தது. சென்னைத் தியாகராஜ நகரில் இயங்கிய நாடக கம்பெனிகளில் இசையமைத்து உள்ளேன். சென்னை வாணிமஹால் அரங்கில் பல நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.
நாடக துறையில் எவரோடெல்லாம் உங்களுடைய தொடர்பு இருந்தது?
பழம் பெரும் நடிகர்கள்,பி.யூ.சின்னப்பா, தியாகராஜர்பாகவதர், மற்றும் நடிகர் ஆனந்தன்,எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்றவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனையும் எனக்கு மறக்க முடியாத நினைவுகள்.
நாடக துறையைத் தவிர சினிமாவில் உங்கள் பங்களிப்பு என்ன?
சினிமா துறையில் எனக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை."நினைப்பதுநிறைவேறும்" என்ற படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன். இன்னும் பெயரிடப்படாத படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். படமும் பாடலும் வெளிவராதது எனது துரதிஷ்டம். என்னோடு சிறுவர்களாக சென்னையில் சினிமாத்துறையில் பணியாற்றி வந்த எனது அண்ணன் மகன்கள் பிற்காலத்தில் பிரபலமான ஸ்டண்டு நடிகர்களாக மாறினார்கள். அவரகள் ஜஸ்டின், செல்வமணி, ஆகியோர்க்ளாவார்கள்.
கர்னாடக இசைக்கலைஞர் என்ற முறையில் அந்த காலத்தில் ஊடகங்களில் என்ன தகுதி உங்களுக்குவழங்கப்பட்டது?
ஆல் இந்தியா ரேடியோவில் 'B' கிளாஸ் என்ற தகுதியோடு பாடினேன். சென்னை, பாண்டிசேரி, திருச்சி, திருவனந்தபுரம் போன்ற ரேடியோ நிலையங்களில் பாடியுள்ளேன்.
இசை துறையில் வேறு என்ன பதிவுகள் செய்துள்ளீர்கள்? தங்களுக்கென்று ஏதாவது இசைத் தட்டு வெளியிட்டிருக்கிறீர்களா?
சினிமா பாடல்கள் கலவாத பல நல்ல தமிழ் இசை கச்சேரிகள் நிறைய நடத்தி உள்ளேன். இரண்டு பக்தி பாடல் கேஸட்கள் வெளியிட்டுள்ளேன். வேத மாணிக்க பிள்ளையின்னிறைய தமிழ் பாடல்களுக்கு இசை அமைத்து பாடியும் உள்ளேன். போதுமான பொருளாதார சூழ்நிலைகள் இல்லாததால் தொடர்ந்து வெளியீடுகள் செய்ய இயலவில்லை.
இசைத் துறையில் தங்களுக்கு ஏதாவது பட்டங்கள் கிடைத்ததுள்ள்தா?
பல வருடங்களுக்கு முன்பு உலக மேதை சுத்தானந்த சுவாமிகள் "இசைமணி" என்ற பட்டம் வழ்ங்கி கவுரவித்தார். திருச்சி தமிழ் இசை சங்கம் 'தமிழ் இசைவேந்தன்' என்ற பட்டம் தந்தனர். மற்றபடி அரசின் எந்த பட்டங்களும் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக அடையாளம் கண்டு கவுரவிக்கப்படவும் இல்லை.
இசையைப் பற்றி?
இறைவனே இசை வடிவம் தான்.இசைக்கு உடலை வருத்த தேவையில்லை. அமைதியான சூழலில் மனதை ஒரு நிலைப் படுத்தி நல்ல தமிழ் இசைப் பாடல்களைகேளுங்கள். உங்கள் வேலை பளுவுக்கிடையே பாடல்கள் கேட்பதை பழகிக் கொள்ளுங்கள். மனதும் புத்துணர்வு பெறும் தமிழ் இசையும் வளரும்.
இன்றைய இசையைப் பற்றி?
இன்றைய இசை கலப்படமாகிவிட்டது
இசையை வளர்க்க இனி என்ன செய்ய வேண்டூம்?
சிறு வயதிலேயே இசை ஆர்வம் அதிகரிக்க பள்ளிகளில் இசையை பாடமாக்கலாம். ஊடகங்களில் மக்களை கவரும் விதத்தில் நல்ல தமிழிசையை ஒலிபரப்பலாம். னல்ல தமிழ் இசைப் பாடல்களை நடை சிதையாத வகையில் குறுந்தகடு, இசைத்தட்டுகள், வெளிவர இசை நிறுவங்கள் முன் வரவேண்டும். நிறைய த்மிழ் இசைக் கல்லூரிகள் துவங்கப்படவேண்டும்.

நேர் காணல்-ஜவஹர்ஜி.

Comments