நெய்தலில் ஒரு நல்முத்து

[நாகர்கோவில் பண்பலை வானொலியில் ஆகஸ்ட் 16ம் தேதி இரவு எட்டு மணிக்கு ஒலிபரப்பான இளையபாரதம் நிகழ்ச்சியில் பிரபல பத்திரிகையாளர், குறுமபட ஆவண பட இயககுனர் திரு. டி. அருள் எழிலன் அவர்களுடைய பேட்டியின் சுருக்கம்]


இவர் குமரி மாவட்டம் புத்தன் துறை என்கிற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.தகப்பனார் திரு.ஆ.தாமஸ் நல்லாசிரியர் விருது வாங்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்,தாயார் திருமதி.பொன்னம்மா இறைவனடி சேர்ந்துள்ளார்
.தனது எண்ணங்களையும்,கருத்துக்களையும் விசாலமாக்கி,பார்வையை கூர்மையாக்கி பல எளிய சாமானிய ஆளுமையுள்ள மனிதர்களை வெகுஜன ஊடகத்தின் முலம் வெளியுலகிற்கு அறிமுகம் செய்து உலாவர செய்ததால் தமிழகத்தின் சிறந்த இளைஞர் என்று பிரபல் இதழான இந்தியா டுடே 2007- 2008 ம் ஆண்டுக்கு தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

அருள் எழிலன் தனது எழுத்தின் முலம் இந்த பிரபஞ்சத்தின் வாழுகின்ற மனிதர்களை அதுவும் சாதரண மனிதர்களை,எளியோர்களை,எந்தவித அதிகாரமும் தனக்கில்லாத மனிதர்களை அவர்கள் வாழும் வாழ்க்கையை,அடிப்படை வாழ்வாதரத்திற்க்காக படும் துயரங்களை,தன்னை இந்த சமுகத்தில் தக்கவைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்,அந்த தனி மனிதன் இந்த சமுகத்திற்கு எடுத்துகூறும் உதாரண தகவல்களையும் மிக உன்னிப்பாக கவனித்து நமக்கு ஊடகங்களின் மூலமாக வெளிக்கொணர செய்கிறர்.

சிற்பி வெறும் கல்லில் அதனுள் உள்ள வடிவத்தையும் கலை படைப்பை மட்டும் தனது தனிப்பார்வையால் செதுக்கி வெளிக்கொண்டு வருவது போல இவர் தனது எழுத்துக்கள் மூலம் பேனா முனை மூலம் சாமானியர்களின் பரிமாணங்களை நமக்கு தெரிவிக்கிறார்.அவர்கள் மேல் இவருக்குள்ள வாஞ்சனையும் நம்மல் உணரமுடிகிறது.இவரிடம் உள்ள மனித நேய பார்வையால்தான் இவரால் ஒரு நல்ல ஆவணப்பட, குறும்பட இயக்குனராகவும், எழுத்தாளராகவும் வலம் வரச்செய்து இன்று ஒரு வெற்றி நாயகனாக்கியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் இளம் வயது முதல் நல்ல புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.தனக்குள்ளே உள்ள படைப்பாற்றலை மேம்படுத்த புத்தகம் படிப்பது மூலம் வளமை ஆக்கலாம் என தெரிவித்தார். இளைஞர்கள் சாதிக்கப் பயணப்படும்போது தகுதிகளை வளர்த்துக் கொண்டு தெளிவான முடிவுகளோடு செயல்படவேண்டும் என்றார்.
வெற்றிப் பெற்ற சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை என்பதை தெளிவு பட கூறினார். சாதனையாளர்கள் ஒவ்வருவொரின் பின்பும் இந்த சமூகம் பல விதங்களில் பின் புலமாகவும் முன்னேற துணை புரிகிறது என்றும், வெற்றி பெற்றவர்கள் ஒவ்வருவரும் இந்த சமூகத்திற்கு நன்றி கடனாக செய்யவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என நினைவுப் படித்தினார்.
அருள் எழிலன் அவர்களுடைய வானொலி உரை இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் நம்பிக்கை வார்த்தைகளாகவே இருந்தது. இந்த இளம் சாதனையாளரை என்னுள் உள் வாங்கியவனாக மண்ணின் மைந்தன் என்ற வித்ததில் பெருமை கொள்கிறேன். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Comments