சண்டே ஸ்பெஷல்-அலையாத்தி

காயலின் எழில் தோற்றம்



உடைந்த பாலத்தின் ஒரு துண்டு


தற்காலிக பாலம்


பொழிமுகம்

ஞாயிற்று கிழமை வந்துட்டாலே எங்க? அவுட்டிங் போறதுன்னு பெரிய சர்ச்சையே நண்பர்களிடையே வந்துடும். இந்த வாரம் மணக்குடி காயலில் போட்டிங் போலாம்ன்னு முடிவானது.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு மணக்குடி பழையாறு காயலில் புதுசா போட்டிங் வசதி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நாகர்கோவிலிருந்து 15கிமி தூரத்தில் உள்ளது மணக்குடி கடற்கரை கிராமம். மணக்குடி ஊரின் நுழைவு பகுதியில் தான் பழையாறு கடலோடு கலக்கும் [பொழிமுகம்] உள்ளது. கீழமணக்குடியும் மேல மணக்குடியும் இணைக்கும் பாலமும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் இயற்கையின் எழில்மிகு வனப்புகளை ஒருசேர பார்க்கலாம். ஒரு பக்கம் தெளிவான காயல் நீர், இன்னொரு பக்கம் நீலக்கடல் சுற்றிச்சூழ அரண்போல மலைப்பகுதி, மருந்துவாழ்மலையும் தெரிகிறது. இராவணன் தூக்கி சென்ற சஞ்சிவி மலையிலிருந்து கீழே விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ்மலை அத்தணை மூலிகை செடிகளும் அந்த மலையில் இன்றும் உண்டு.
சுனாமி தாக்குதலில் சிதறிப்போன பழைய பாலம் படகுத்தளத்தின் பக்கம் ஒரு துண்டும் மறுபக்கம் இன்னொறு துண்டுமாக இன்றும் சுனாமியின் வேகத்தினை நாம் உணரும் விதமாக கிடக்கிறது. நான்கு துண்டுகளை இணைத்து இந்த பாலம் கட்டியிருந்தனர் ஒவ் ஒரு துண்டும் 3000 டண் எடையுள்ளது இதில் இரண்டு துண்டுகளை சுனாமி அலைகள் எங்கு தூக்கி வீசியது என்றே இன்னும் தெரியவில்லையாம். ஒரு பிரமாண்டமான பாலத்தையே காணமல் செய்திருந்தது சுனாமி அலைகள் பிரமிப்பாகவும், அதிர்ச்சியுமாக இருந்தது.
படகில் பயணம் செய்ய தலைக்கு 15ரூபாய் வசூலிக்கின்றனர் காயலில் சுமார் 1கிமி அழைத்து செல்கின்றனர் அது ஒரு திரில் பயணம் பாருங்கள். வழிநெடுக கரையில் வரிசையாக தென்னை மரங்கள் வெயிலுக்கு குடை பிடித்தது போல உள்ளது, நீரில் மூழ்கி தலையை மட்டும் வெளியில் காட்டும் நீர்பறவைகள், நீண்ட கழுத்து கொண்ட வெளிநாட்டு பறவைகள், துள்ளிகுதிக்கின்ற மீன்கள் என மிக குதூகலமாக உள்ளது. இதற்கெல்லம் மகுடம் வைத்தது போல காயலின் நடுப்பகுதியில் ஆங்காங்கே மாங்குரு தீவுகள் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது, அடர்த்தியாக உயரமாக வளர்ந்த அலையாத்தி மரங்கள், சுராபுன்னை மரங்கள் என அரிய வகை மரங்கள் உள்ளன.
இந்த அலையாத்திமரங்களின் மேல் பகுதி ஒரு ஆலமரத்தை போன்று அடர்த்தியாக உள்ளது கீழ் பகுதி சின்ன சின்ன குச்சி போன்று நெருக்கமாக அமைந்துள்ளது. இந்த அலையாத்தி மரத்தின் சிறப்பே அலையின் வேகத்தினை தடுக்கும் வலிமை உண்டாம். சுனாமிக்கு பிறகு இந்த மாங்குரு காடுகளை [ MANGROVE AFFORESTATION PROGRAMME ] என்று தனி கவனத்துடன் வளர்த்து வருகின்றனர்.
உண்மையிலே இந்த பயணம் நண்பர்களிடையே மிக சந்தோசமாக இருந்தது மட்டுமல்லாமல் இயற்கையை பற்றிய ஒரு நேசமும் வரச்செய்தது. மனிதர்களுக்கு இயற்கை ஒரு வரப்பிரசாதம்தான். மரணத்திற்க்கு பின்பு சொர்க்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை வாழும் போதே இயற்கையை ரசிப்போம், பேணிபாதுகாப்போம், அதனோடு இணைந்த ஒன்றித்த வாழ்வை வாழ்ந்து சொர்க்கத்தை அனுபவிப்போம்.

Comments